இந்தியர் உட்பட மூவருக்கு பொருளாதார நோபல் பரிசு

தினமலர்  தினமலர்
இந்தியர் உட்பட மூவருக்கு பொருளாதார நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: 2019ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை, இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.


ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 2019ம் ஆண்டிற்கான வேதியியல், இயற்பியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்., 14) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்று அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை, அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டப்லோ, மைக்கேல் கிரமர் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததால் இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, கோல்கட்டாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியிலும், டில்லி நேரு பல்கலைகழகத்திலும் பயின்று, பின் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர். பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற 2வது பெண் என்ற பெருமையை பிரான்ஸில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் எஸ்தர் பெற்றார். இதில், அபிஜித் மற்றும் எஸ்தர் கணவன், மனைவி.

மூலக்கதை