திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு வேகமாக பரவுகிறது: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பள்ளிகளில் காய்ச்சல் அறிகுறியுடன் வரும் குழந்தைகளை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு டெங்கு காய்ச்சல் பரவியபோது, பள்ளிகளில் வியாழன்தோறும் தூய்மைப்பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அரசுப்பள்ளிகள் மட்டுமின்றி அனைத்து பள்ளிகளும் இதை பின்பற்றின. தொடர் விடுப்பு எடுப்போர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சுகாதாரத்துறைக்கு அனுப்பப்பட்டது.
டெங்கு தீவிரமாக பரவிய பின், மாணவர்களின் காய்ச்சலை கட்டுக்குள் கொண்டுவர சிரமம் ஏற்பட்டது. எனவே, ‘மாஸ் கிளீனிங்’ திட்டத்தை தற்போதே பள்ளிகளில் அமல்படுத்த உத்தரவிடவேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், “பகலில் கடிக்கும் ‘ஏடிஸ்’ கொசுவால்தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.
குழந்தைகள் பெரும்பாலான நேரத்தை பள்ளிகளில் கழிப்பதால் பள்ளி வளாகம், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க உத்தரவிட வேண்டும். தொடர் தூய்மை பணியால் மட்டுமே கொசு உற்பத்தியை தடுக்க முடியும்.
கடந்தாண்டுபோல குறிப்பிட்ட வார நாளில் தூய்மை பணி மேற்கொள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவேண்டும்” என்றனர்.
.