எட்டு ஆண்டு அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை: நடிகை குஷ்பு சாடல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
எட்டு ஆண்டு அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை: நடிகை குஷ்பு சாடல்

களக்காடு: தமிழகத்தில் 8 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று களக்காட்டில் நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக நேற்று முன்னீர்பள்ளத்தில் பிரசாரத்தில் தொடங்கி தருவை, ஓமநல்லூர், திடியூர், செங்குளம், சிங்கிகுளம், தேவநல்லூர், மீனவன்குளம், களக்காடு, மாவடி, திருக்குறுங்குடி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்த தொகுதி காமராஜர் காலம் முதல் காங்கிரசின் பாரம்பரிய தொகுதியாக உள்ளது.

தற்போது 8 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. ஒரு நல்ல திட்டங்கள் கூட கொண்டு வரப்படவில்லை.

ஏதாவது ஒரு திட்டம் கொண்டு வந்தேன் என்று அவர்களால் சொல்ல முடியுமா? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய ஒரு மனது வேண்டும், அந்த மனது திமுகவிடம் உள்ளது.

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

.

மூலக்கதை