ஜெயக்குமார் சொல்கிறார் உரிமை பறிபோனால் பதவியை துறப்போம்

தினகரன்  தினகரன்
ஜெயக்குமார் சொல்கிறார் உரிமை பறிபோனால் பதவியை துறப்போம்

களக்காடு: தமிழக உரிமைகள் பறிபோகும் என்றால் பதவியை துறக்க நாங்கள் தயங்க மாட்டோம் என்று களக்காட்டில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.நெல்லை மாவட்டம் களக்காட்டில் அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 1995ல் மத்திய அரசுக்கு ஜெயலலிதா ஆதரவு கொடுத்தார். கர்நாடகாவில் இருந்து தண்ணீரை திறந்து விட மத்திய அரசு வலியுறுத்தவில்லை என்பதற்காக ஜெயலலிதா தனது ஆதரவை விலக்கிக் கொண்டார். பதவியை ேதாளில் கிடக்கும் துண்டாக நாங்கள் கருதுகிறோம். தமிழக உரிமைகள் பறிபோகும் என்றால் பதவியை துறக்கவும் தயங்க மாட்டோம் என்றார்.

மூலக்கதை