பலாத்காரம் செய்து பெண் படுகொலை: 100 அடி பள்ளத்தில் சடலம் மீட்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பலாத்காரம் செய்து பெண் படுகொலை: 100 அடி பள்ளத்தில் சடலம் மீட்பு

தேனி: பலாத்காரம் செய்து இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். 100 அடி பள்ளத்தில் கிடந்த உடலை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடி மேற்கு தொடர்ச்சி மலையில் மோடிமெட்டு அடுக்கு மலைச்சாலை 17 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இதில் 8வது கொண்டை ஊசி வளைவிற்கு அடுத்துள்ள காத்துபாறை வளைவில் பிணம் கிடப்பதாக குரங்கணி போலீசாருக்கு ஜீப் டிரைவர் ஒருவர் நேற்று தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் நேற்று 8வது கொண்டை ஊசி வளைவு பகுதிக்கு சென்றனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் உடலை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.



இன்று காலை டிஎஸ்பி ஈஸ்வரன் தலைமையில் போலீசார் தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். காத்துபாறை என்ற இடத்திலிருந்து 100 அடி பள்ளத்தில் கயிறு கட்டி இறங்கி தேடினர்.

அரை நிர்வாண கோலத்தில் 32 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. 2 மணிநேரம் போராடி போலீசார் உடலை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர் யார், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. அவரை பலாத்காரம் செய்து கொன்று, அதை மூடி மறைக்க 100 அடி பள்ளத்தில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை