அயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

தினமலர்  தினமலர்
அயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

லக்னோ: அயோத்தியில் வரும் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளதாக மாவட்ட நீதிபதிதெரிவித்து உள்ளார்.


உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள, ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி நில விவகாரத்தை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை, ஆகஸ்ட் முதல் நாள் தோறும் விசாரித்து வருகிறது. அயோத்தி வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களையும் அக்.,1 8 க்குள் முடிக்க வேண்டும்.


இதற்காக விசாரணையை தினமும் ஒரு மணி நேரம் நீட்டிக்கவும், சனிக்கிழமை அன்றும் வழக்கை விசாரிக்கவும் தயாராக உள்ளோம். அனைவரும் சேர்ந்து வழக்கை அக்.,18 க்குள் முடிக்க முயற்சி செய்வோம். மனுதாரர்கள் விரும்பினால், மத்தியஸ்தம் மூலம், பிரச்னையை தீர்த்து கொள்ளலாம் எனக்கூறினார்.


இறுதி வாதங்களை அக்.,18 க்குள் முடிக்கப்பட்டால், நவ.,17 க்குள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நவ.,17 ல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற உள்ளார். அதற்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் எனக்கூறப்படுகிறது.


இந்நிலையில் அயோத்தி மாவட்ட நீதிபதி அனுஜ்குமார் ஜா கூறியதாவது: இருபத்தி ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தி நில வழக்கில் தீர்ப்பை எதிர்பார்த்து வரும் டிசம்பர் மாதம் 10 ம் தேதி வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் வரும் நாட்களில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இதனை முன்னிட்ட இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை