சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

பீஜிங்: தெற்கு சீனாவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். இது, ரிக்டர் அளவில் 5. 2 ஆக பதிவானது.

சீன நாட்டின் தெற்கு சீனாவின் குவாங்சி சுவாங் தன்னாட்சி பகுதியில் நேற்றிரவு 10. 55 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5. 2 ஆக பதிவாகியுள்ளது.

இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம், யுலின் நகரத்தில் சுமார் 10 கி. மீ ஆழத்தில் பதிவானதாக, அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

திடீெரன இரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அப்பகுதியில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.

தூங்கிக் கொண்டிருந்த மக்கள், அலறியடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று, அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை