நோபல் பரிசு பெற்றவரை கைது செய்ய உத்தரவு
தாகா: வங்கதேசத்தை சேர்ந்தவர் முகமது யூனுஸ், 79. அந்நாட்டில் கிராமின் வங்கிகளை துவக்கியவர். இதற்காக, அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில், தொழிலாளர் சட்ட விதிகளை மீறிய வழக்கில், அவர் ஆஜராகவில்லை எனக் கூறி, அவரை கைது செய்ய, தாகா நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.