மீண்டும் கேமரா முன் நின்ற ஷோபனா

தினமலர்  தினமலர்
மீண்டும் கேமரா முன் நின்ற ஷோபனா

மலையாள சினிமாவில் மிகச் சிறந்த நடிகைகள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தவர் நடிகை ஷோபனா. இயல்பிலேயே நடனம் கற்றவர் என்பதால் தனது முகபாவத்தில், கண்கள் அசைவில் கூட நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.. அப்படிப்பட்டவர் கடந்த சில ஆண்டுகளாக திரையுலகை விட்டு ஒதுங்கி, தனது நாட்டிய பள்ளியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையுலகில் நுழைந்துள்ளார் ஷோபனா.

இவர் நடிக்கும் படத்தை துல்கர் சல்மான், தயாரிப்பதுடன் கதாநாயகனாகவும் நடிக்கிறார். படத்தை பிரபல இயக்குனர் சத்தியன் அந்திக்காடுவின் மகன் அனூப் சத்யன் இயக்குகிறார். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்தப்பாத்த்தில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபியுடன் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஷோபனா இணைந்து நடிக்கிறார் என்பது தான். இவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக சந்திரமுகியில் பிரபு ஜோதிகா கதாபாத்திரங்களை அதன் ஒரிஜினலான மணிச்சித்ரதாழ் படத்தில் நடித்தவர்கள் இந்த ஜோடி தான்.

மூலக்கதை