புரோ கபடி லீக் போட்டியில் 3ம் இடத்துக்கு முன்னேறிய அரியானா: இன்றிரவு 2 லீக் ஆட்டங்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு

பஞ்ச்குலா: புரோ கபடி லீக் தொடரில் அரியானாவின் பஞ்ச்குலாவில் நேற்றிரவு நடந்த 113வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 60-40 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி 15வது வெற்றியை பதிவு செய்தது. 11வது தோல்வியை சந்தித்த புனே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.

மற்றொரு ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களம் கண்ட அரியானா ஸ்டீலர்ஸ் 38-37 என்ற புள்ளி கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை வென்றது.

மேலும், 19வது ஆட்டத்தில் ஆடிய அரியானா 12 வெற்றி, 6 தோல்வி, ஒரு சமன் என்று 65 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தை பிடித்து இருப்பதுடன் அடுத்த சுற்றுக்கும் தகுதி பெற்றது.

ஏற்கனவே டெல்லி, பெங்கால் அணிகளும் அடுத்த சுற்றை எட்டி விட்டன.

இன்றைய லீக் ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்- தபாங் டெல்லி (இரவு 7. 30 மணி), தமிழ் தலைவாஸ்-மும்பை (இரவு 8. 30 மணி) அணிகள் பாஞ்ச்குலா தேவிலால் மைதானத்தில் மோதுகின்றன.

.

மூலக்கதை