கீச்சுச் சாளரம் -தொகுப்பு: நீச்சல்காரன்
கோவிலுக்கு புறாக்கள் வருவது
இறைவனைத் தேடி அல்ல,
இரையைத் தேடி..!
@AnirudhAakash4
தினமும் 10 பேங்க்ல இருந்து
மெசேஜ் வருது அக்கவுண்ட்
ஓப்பன் பண்ணுங்க
*0* பேலன்ஸ்லனு
ஏற்கனவே அக்கவுண்ட் இருக்கிற
பேங்க்லியே என் பேலன்ஸ்
*0* தான்டா சொன்னா
புரிஞ்சுக்கோங்கடா
@Aaathithamizhan
ஒழுங்கான ஒரு வடிவம் இல்லை அதற்கு "உருளை" கிழங்கு என்று பெயர்.....
@Oorkkavalaan
பெண் அழுகிறாள் என்றால்
தன்னைத் தெரியப்படுத்துகிறாள்
என்று அர்த்தம்..!!
ஆண் அழுகிறான் என்றால் தன் தைரியத்தை இழந்துவிட்டான் என்று அர்த்தம்..!!
@mugamoodi11
தன்னைத் தவிர வேறொரு குழந்தையை தூக்கிக் கொஞ்சும் தாயிடம் பொறாமையுடன் தாவிக்குதித்து செல்லும் குழந்தையின் செல்லக் கோபமும் கொள்ளை அழகே 😍😍😘😘😘
@star_nakshatra