மயிலாடுதுறை மாவட்டக் கோரிக்கைக்காக ஒரு மாபெரும் பாதயாத்திரை...

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
மயிலாடுதுறை மாவட்டக் கோரிக்கைக்காக ஒரு மாபெரும் பாதயாத்திரை...

வைத்தீஸ்வரன் கோவில் கடைவீதி, குத்தாலம் பேருந்து நிலையம், மங்கைநல்லூர் கடைவீதி, செம்பனார் கோவில் கடைவீதி ஆகிய நான்கு இடங்களில் இருந்தும் வெவ்வேறு நான்கு திசைகளிலிருந்து மயிலாடுதுறை நோக்கி மயிலாடுதுறையை மாவட்டமாக ஆக்க கோரி பதாகைகளை ஏந்திய மக்கள் திரள் பாதயாத்திரையாக மிகுந்த எழுச்சியோடு மயிலாடுதுறை தாலுக்கா அலுவலகம் வந்து நிறைவு செய்தனர். இதில் கலந்து கொண்ட பலரும் மயிலாடுதுறையை ஏன் மாவட்டமாக ஆக்க வேண்டும் என்பதற்கான பல காரணங்களை விளக்கி கூறினர்... 

விவசாயச் சங்கத்தின் பிரதிநிதி ஆறுபாதி கல்யாணம் மற்றும் பத்திரிக்கையாளர் -சமூக ஆர்வலர் திரு. கோமல் அன்பரசன் ஆகியோரின் ஆவேச உரை அங்குள்ளவர்களை ஆர்ப்பரிக்க வைத்தது...

மூலக்கதை