இலங்கை அணியின் இந்தியா டூர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
இலங்கை அணியின் இந்தியா டூர் அறிவிப்பு

புதுடெல்லி: இலங்கை அணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஜனவரியில் ஜிம்பாப்வே அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அரசியல் குறுக்கீடு காரணமாக ஜிபாப்வே அணியை சஸ்பெண்ட் செய்வதாக சர்வதேச  கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடந்த ஜூலையில் அறிவித்தது.இதைத் தொடர்ந்து, ஜிம்பாப்வே அணிக்கு பதிலாக இலங்கை அணியுடன் டி20 தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில், அட்டவணை விவரத்தை பிசிசிஐ  நேற்று வெளியிட்டது. இதன்படி முதல் டி20 போட்டி கவுகாத்தியில் ஜனவரி 5ம் தேதி நடைபெறும்.இரண்டாவது போட்டி இந்தூரில் ஜன. 7ம் தேதியும், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி புனேவில் ஜன. 10ம் தேதியும் நடைபெற உள்ளன.

மூலக்கதை