கல்யாணமே வேண்டாம் என அடம்பிடிக்கும் நடிகை

என் தமிழ்  என் தமிழ்
கல்யாணமே வேண்டாம் என அடம்பிடிக்கும் நடிகை

மூன்றெழுத்து முன்னணி நடிகை ஒருவர் திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே காதுகளை கையினால் மூடிக்கொள்கிறாராம்.

தமிழ் திரையுலகில் 10 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி நாயகியாக வலம் வருகிறாராம் மூன்றெழுத்து நடிகை. ஏற்கனவே தயாரிப்பாளர் ஒருவருடன் அந்த நடிகை நெருங்கி பழகி வந்தாராம். சில பிரச்சனைகளால் அவரை பிரிந்துவிட்டாராம். இதனால் மனமுடைந்த அந்த நடிகை தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறாராம்.

அந்த நடிகை “திருமணம்” என்ற வார்த்தையை கேட்டாலே காதுகளை கையினால் மூடிக்கொள்கிறாராம். அந்த நடிகைக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று தாயார் ஆசைப்படுகிறாராம். அவருடைய ஆசை பற்றி நடிகை கொஞ்சமும் பரிசீலித்து பார்க்காமல், “எனக்கு கல்யாணமே வேண்டாம்” என்று ஒரேயடியாக கையெடுத்து கும்பிடுகிறாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை