தாய்லாந்து காடுகளில் பொன்னியின் செல்வன்

தினமலர்  தினமலர்
தாய்லாந்து காடுகளில் பொன்னியின் செல்வன்

அமரர் கல்கி எழுதிய மிகப்பெரிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன், புத்தக விரும்பிகளின் மனதை கவர்ந்த நாவல். இதை திரைப்படமாக்கும் முயற்சி அவ்வப்போது துவங்கப்பட்டு சில காரணங்களால் அப்படியே முடங்கி போனது உண்டு. தற்போது மணிரத்னம் இந்த நாவலை தனது கனவு படமாகவே இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக மிக பிரமாண்டமான நட்சத்திரங்களும் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளது என்று தற்போது தெரியவந்துள்ளது. தாய்லாந்தில் உள்ள காடுகளில் இதன் முக்கிய பகுதிகள் படமாக்கப்பட இருக்கின்றனவாம். இதையடுத்து நூறு நாட்கள் கொண்ட முதல் கட்ட படப்பிடிப்பிற்காக தாய்லாந்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதாம். இதற்காக முன்னணி நட்சத்திரங்கள் அனைவரின் அதிக நாட்கள் கொண்ட கால்ஷீட் கேட்டு வாங்கப்பட்டுள்ளது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை