பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அடுத்த வாரத்தில் இருமுறை சந்திப்பதாக தகவல்

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அடுத்த வாரத்தில் இருமுறை சந்திப்பதாக தகவல்

அமெரிக்கா: பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அந்நாட்டில் அடுத்த வாரத்தில் இருமுறை சந்திக்கின்றனர். பிரதமராக 2-வது முறை பொறுப்பேற்ற பிறகு மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஏற்கனவே இருமுறை சந்தித்து பேசியுள்ளார். ஜி20 உச்சி மாநாட்டின் போது ஜப்பானிலும் , ஜி7 உச்சி மாநாட்டின்போது பிரான்சிலும் சந்தித்து பேசினார். இந்நிலையில் அமெரிக்கா செல்லும் மோடி இருமுறை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேச உள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அஷ்வதன் சிங் தெரிவித்துள்ளார். வரும் சனிக்கிழமை ஹுஸ்ட் நகருக்கு செல்லும் மோடி, மறுநாள் இந்திய வம்சாவழியினர் முன்னிலையில் உரையாற்ற உள்ளார். நலமா மோடி என்ற தலைப்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சி, 50,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மோடியுடன் உரையாற்ற உள்ளார். இதேபோல் நியூயார்க் நகரில் நடைபெறும்  ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தின் போதும் பிரதமர் மோடியும், அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்திக்கின்றனர். நான்கு மாத இடைவெளியில் இந்திய பிரதமரும் அமெரிக்க அதிபரும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இந்திய அமெரிக்க உறவின் தன்மையை இந்த சந்திப்புகள் வெளிப்படுத்துவதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அஷ்வதன் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா ,அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறை  உறவு மிக முக்கியமானதாக மலர்ந்திருப்பதாகவும் இந்த நூற்றாண்டின் கூட்டுறவுக்கு இலக்கணமான உறவாக மாறும் திறன் படைக்கும் என்று அவர் கூறியுள்ளார். பாதுகாப்புத்துறை ஓத்துழைப்பு தான் இதற்கு அடிப்படை என்றும் அஷ்வதன் சிங் கூறியுள்ளார். இந்தியா , அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் பல்வேறு பாதுகாப்பு துறைகளை சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்காவுக்கான இந்திய தூதர், வேறு எந்த நாட்டையும் விட அதிக கூட்டுறவு பயிற்சிகளை இருநாடுகளும் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

மூலக்கதை