9 மாத வளர்ச்சியும் கோவிந்தா.. ரத்த கண்ணீர் வடிக்கும் முதலீட்டாளர்கள்..!
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும், வர்த்தக வளர்ச்சியும் மோசமான நிலையில் இருக்கிறது, இதற்கு அரசின் தவறான முடிவுகளும் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவதால் அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த 4 மாதங்களாகத் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையில் கடந்த 9 மாதமாக ஏற்பட்ட வர்த்தக வளர்ச்சி அனைத்தும் சரிந்து திரும்பவும் 2019 ஜனவரி 1ஆம் தேதி நிலவரத்திற்கே வந்துள்ளது. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர்.