சாலவாக்கத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: எம்எல்ஏக்கள் சுந்தர், புகழேந்தி பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சாலவாக்கத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: எம்எல்ஏக்கள் சுந்தர், புகழேந்தி பங்கேற்பு

உத்திரமேரூர்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் சுகுமார் தலைமை வகித்தார்.

புகழேந்தி எம்எல்ஏ, ஒன்றிய, நகர செயலாளர்கள் குமார், ஞானசேகரன், சேகர், குமணன், கண்ணன், ஸ்ரீதர், தம்பு, பாரிவள்ளல், இனியரசு, ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ சிறப்புரையாற்றினார்.

இதில், ‘இந்தி மட்டுமே இந்தியாவில் அடையாளம்’என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதை கண்டித்தும், அதனை திரும்ப பெற கோரியும் காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் வரும் 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது,இளைஞரணி தலைவர் அறிவிப்புக்கிணங்க பெருமளவு இளைஞர்கள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரை கட்சியில் இணைத்து கட்சியைபலப்படுத்துதல் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர்கள் அப்துல்மாலிக், வேதாசலம், சோழனூர் ஏழுமலை, பெ. மணி, முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை