ஆடை வடிவமைப்பாளர் திருமணத்தில் மனைவியுடன் கலந்து கொண்ட திலீப்

தினமலர்  தினமலர்
ஆடை வடிவமைப்பாளர் திருமணத்தில் மனைவியுடன் கலந்து கொண்ட திலீப்

மலையாள நடிகர் திலீப், கடந்த 2 வருடத்திற்கு முன்பு நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி சிறை சென்று, பிறகு ஜாமினில் வெளிவந்து படங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.. அதேசமயம் கடந்த ஒரு வருடமாக பொது விழாக்களுக்கும், நண்பர்களின் இல்ல விழாக்களுக்கும் செல்வதை பெரும்பாலும் தவிர்த்து வந்தார்.. தற்போது சில விழாக்களில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு வருகிறார் திலீப்.

அதேபோல இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நடிகை காய்யா மாதவனும் ஆரம்பத்தில் விழாக்களில் கலந்து கொள்வதற்கு சங்கடப்பட்டு தவிர்த்து வந்தவர், சமீபத்தில் குஞ்சாக்கோ போபன் மகளுக்கு பெயர் சூட்டும் விழாவில் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் தற்போது தனது ஆஸ்தான ஆடை வடிவமைப்பாளராக வெங்கட் சுனில் என்பவரது திருமண நிகழ்வில் மனைவி காவ்யா மாதவனுடன் தம்பதி சகிதமாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்ர் திலீப். அந்த அளவிற்கு தனது ஆடை வடிவமைப்பாளர் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர் என்கிறார்கள் திரையுலகத்தினர்...

மூலக்கதை