குற்றங்களில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ்

தினகரன்  தினகரன்
குற்றங்களில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த பழைய வண்ணாரப்பேட்டை சாஜா முனுசாமி தெருவை சேர்ந்த வடிவேல் (29), சத்யா (எ) லொடுக்கு சத்யா (23), ஜல்லடியன்பேட்டை, திருவள்ளுவர் நகர் முதல் தெருவை சேர்ந்த  சரவணன் (37), கஞ்சா விற்பனை ெசய்து வந்த திண்டுக்கல் மாவட்டம் நெல்லூர் 9வது வார்டு பகுதியை ேசர்ந்த அகிலன் (26) ஆகிய 4 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

மூலக்கதை