லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பாதுகாக்கிறது: ஸ்டாலின் டிவிட்

தினகரன்  தினகரன்
லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பாதுகாக்கிறது: ஸ்டாலின் டிவிட்

சென்னை: அமெரிக்காவின் மென்பொருள் நிறுவனமான சி.டி.எஸ் சென்னையில் கட்டடம் கட்ட அனுமதி பெற ரூ.26 கோடி தமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டு அமெரிக்க அரசுக்கு அபராதம் கட்டியுள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பாதுகாக்கிறது என ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து மத்திய அரசும் சி.பி.ஐ யும் இதனை கண்டும் காணாமல் ஊக்குவிக்கிறதா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலக்கதை