ரூ.5.50 கோடி மதிப்பு நிலம் மோசடி தொடர்பாக அதிமுக தாம்பரம் நகர கூட்டுறவுத் தலைவர் மாணிக்கம் கைது
சென்னை: ரூ.5.50 கோடி மதிப்பு நிலம் மோசடி தொடர்பாக அதிமுக தாம்பரம் நகர கூட்டுறவுத் தலைவர் மாணிக்கம் கைது செய்யப்பட்டுள்ளார். இரும்புலியூர் தேவாலயம் அருகே 1.8 ஏக்கர் நிலத்தை அபகரித்து தொழிலதிபரின் மனைவி விசித்திராவுக்கு விற்றுவிட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் அதிமுக பிரமுகர் மாணிக்கம், மணி, குமார், முத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.