ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலை விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வந்தனர்
டெல்லி: ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலை விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி பொன் .மாணிக்கவேல் நடராஜர் சிலையை சென்னைக்கு கொண்டு வர உள்ளார். 37 ஆண்டுகளுக்கு முன் நெல்லை மாவட்ட கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில் கருவறை கதவை உடைத்து திருடிய நடராஜர் சிலையை தற்போது டெல்லிக்கு கொண்டுவந்துள்ளனர்.