துபாயில் சிக்கிய 200 இந்தியர்கள்: நாடு திரும்ப ஏற்பாடு

தினமலர்  தினமலர்
துபாயில் சிக்கிய 200 இந்தியர்கள்: நாடு திரும்ப ஏற்பாடு

துபாய் : வளைகுடா நாடுகளில் ஒன்றான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், கடந்த ஓராண்டாக, ஊதியம் வழங்கப்படாமல், அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி தவிக்கும் 200 இந்தியர்களுக்கு, விரைவில் ஊதியம் வழங்கி, அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப முயற்சிகள் நடந்து வருவதாக, இந்திய துாதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலாவதி

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், அல் வசிதா எமிரேட்ஸ் என்ற உணவு தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில், இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, பிலிப்பைன்ஸ், எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த, 300 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இவர்களுக்கு, கடந்த ஓராண்டாக, இந்த நிறுவனம், ஊதியம் வழங்கவில்லை. 'விசா'வும் காலாவதி ஆகிவிட்டதால், அவர்களால், சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல், அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி அவதிப்பட்டு வந்தனர்.



நிலுவை தொகை


இதில், 200 பேர், இந்தியாவை சேர்ந்தவர்கள். அதில் பெரும்பாலானவர்கள், கேரளாவை சேர்ந்தவர்கள். இவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில், இந்திய துாதரக அதிகாரிகள் ஈடுபட்டனர்.அவர்கள் பணியாற்றிய நிறுவனத்துடன் பேசி, அவர்களுக்கு வரவேண்டிய நிலுவை தொகையை பெற்று தந்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணி, அடுத்த வாரத்தில் முடிவடையும் என எதிர்பார்ப்பதாக, துாதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை