எல்லை தாண்டியதாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை சிறையிலடைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
எல்லை தாண்டியதாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை சிறையிலடைப்பு

மணமேல்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம்  233 விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு  மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஹபீப் ரகுமான் (51) என்பவருக்கு சொந்தமான  விசைப்படகில், அதே ஊரை சேர்ந்த ஜெரோம்(24),   மேக்ஸன் (29), ரவி (19),  கேம்லஸ்(56) ஆகிய 4 மீனவர்கள்  கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் இந்திய எல்லையான  நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து  கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் புதுகை மீனவர்களின் படகில் இடித்து நிறுத்தினர்.



பின்னர் மீன்பிடி வலைகளை அறுத்து கடலுக்குள் எறிந்ததுடன், எல்லை தாண்டி வந்ததாக கூறி 4 மீனவர்களையும்  கைது செய்தனர்.   மேலும் அவர்களது விசைப்படகை கயிறு மூலம் கட்டி இலங்கைக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை  காங்கேசன் ராணுவ முகாமுக்கு கொண்டு சென்று  விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேரை இலங்கை  கடற்படையினர் கைது செய்த சம்பவம் கோட்டைப்பட்டினம் பகுதியில் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.


.

மூலக்கதை