அத்திவரதர் வைபவத்தில் ஆக.16,17ம் தேதிகளில் விஐபி, விவிஐபி தரிசனம் ரத்து : காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா

தினகரன்  தினகரன்
அத்திவரதர் வைபவத்தில் ஆக.16,17ம் தேதிகளில் விஐபி, விவிஐபி தரிசனம் ரத்து : காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா

காஞ்சிபுரம் :அத்திவரதர் வைபவத்தில் ஆக.16,17ம் தேதிகளில் விஐபி, விவிஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என்று காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். ஆகம விதிப்படி ஆக.17இல் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் என்று கூறிய ஆட்சியர், அனைத்து துறையினரும் இரவு பகல் பாராமல் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்றும் பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர் கூறியது பின்வருமாறு : *அத்திவரதரை இதுவரை 89.75 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.*பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதால் தரிசனத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது.*நாளை 12 மணியுடன் விஐபி தரிசனம் நிறைவு பெறுகிறது.  நாளை மறுநாள் விஐபி தரிசனம் கிடையாது.*17-ம் தேதி அன்று ஆறு கால பூஜைகள் நடத்தப்படும். ஆகம விதிகளின் படி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார். *அனைத்து துறை ஊழியர்களும் சிறப்பாக, அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றனர்.*பாதுகாப்பு பணியில் காவல்துறையின் பங்களிப்பு முக்கியமானது, போக்குவரத்து வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை