கடலூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்
கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலின் போது பணியிட மாற்றம் செய்த துணை வட்டாட்சியர்களை அதே இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.