சுய நிர்ணய உரிமைக்காக காஷ்மீர் மக்கள் நடத்தும் போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்: பாகிஸ்தான் தூதரகம்
புதுடெல்லி: சுய நிர்ணய உரிமைக்காக காஷ்மீர் மக்கள் நடத்தும் போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக பொறுப்பு அதிகாரி எஸ்.எச்.ஷா அந்நாட்டு சுதந்திர தினத்தையொட்டி இவ்வாறு பேசினார். இதை தொடர்ந்து காஷ்மீரிகளுக்கு அரசியல், தார்மிக, அரசுமுறை ஆதரவை பாகிஸ்தான் தொடர்ந்து அளிக்கும் என்று தூதரக அதிகாரி உறுதியளித்தார்.