ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு: என்.கே.சவுத்திரி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு: என்.கே.சவுத்திரி அறிவிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அக்டோபர்  மாதம் 12 முதல் 14 ஆம் தேதி வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்துள்ளது. இதேபோன்று காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சியில் உரையாற்றிய போது ஜம்மு காஷ்மீரில் திரைத்துறையினர் படப்பிடிப்பை நடத்தவாருங்கள், அப்பகுதியில் தொழில் தொடங்க முதலீடு செய்யுங்கள் என தொழில்அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் வரும் அக்டோபர் மாதம் வரும் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை முதன்மை செயலாளர் என்.கே.சவுத்திரி தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்கவிழா அக்டோபர் 12 ஆம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் என என்.கே.சவுத்திரி தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்கள் மாநாடு ஜம்மு காஷ்மீரில் நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை