வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 4,710 வீடுகள் கட்டும் குடிசை மாற்றுவாரிய திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை

தினகரன்  தினகரன்
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 4,710 வீடுகள் கட்டும் குடிசை மாற்றுவாரிய திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை

சென்னை: வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் குடிசை மாற்றுவாரியம் சார்பில்  4,710 வீடுகள் கட்டும் திட்டத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளியங்கிரி மலைவாழ்மக்கள் பாதுகாப்பு சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை நீதிமன்றம் இவ்வாறு ஆணையிட்டுள்ளது. வீடுகள் கட்ட பல்வேறு துறைகளின் அனுமதி பெறவில்லை என தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் போது, மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் ஒப்புதல் அளிக்காதவரை பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை