அமெரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கியால் சுட்டு 20 பேர் படுகொலை...21 வயது இளைஞர் வெறிச்செயல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கியால் சுட்டு 20 பேர் படுகொலை...21 வயது இளைஞர் வெறிச்செயல்

எல்பசோ: அமெரிக்காவில் டெக்சாஸில் வால்மார்ட் ஷாப்பிங் மாலில் நேற்று துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் நடத்திய துப்பாக்கிசூட்டில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு கலிபோர்னியா டெக்சாஸ் மாகாணத்தின் எல் பசோ பகுதியில் வால்மார்ட் ஷாப்பிங் மால் அமைந்துள்ளது.

வார இறுதி விடுமுறை என்பதால் ஷாப்பிங் மாலில் கூட்டம் அதிகமாக இருந்தது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த ஷாப்பிங் மாலின் உள்ளே திடீரென புகுந்த ஒரு மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கினான். பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடினர்.

மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டதாக, அம்மாநில கவர்னர் கிரெக் அபார்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவர்களில் 3 மெக்ஸிகன் மக்களும், காயமடைந்தவர்களில் 6 பேரும் இருப்பதாக மெக்சிகோவின் ஜனாதிபதி மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தெரிவித்தார். தாக்குதல் நடத்திய நபர் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 21 வயதுள்ள அமெரிக்க இளைஞர் என்று தெரியவந்தது.

இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை