கர்நாடகாவில் போராட்டம் எதிரொலி: பெங்களூர் நகரில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு...சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் போராட்டம் எதிரொலி: பெங்களூர் நகரில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு...சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு

பெங்களூரு: தொண்டர்கள் போராட்டம் எதிரொலி காரணமாக பெங்களூர் நகரில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்த 18ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டபேரவையில் தாக்கல் செய்தார். தீர்மானத்தின் மீது ஒரு மணி நேரம் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, எம்எல்ஏகளுக்கு சட்டமன்ற கட்சி தலைவர்கள் பேரவை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறக்கும் அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாயிண்ட் ஆப் ஆர்டரை காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் சித்தராமையா கொண்டு வந்ததால், அன்று நாள் முழுவதும் அவையில் அப்பிரச்னை தொடர்பான விவாதம் நடந்தால் நம்பிக்கைகோரும் தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடக்கவில்லை.மறுநாள் 19ம் தேதி அவை கூடியதும் கொறடா உத்தரவு விவாதம் தொடர்ந்தது. அதே நாளில் நம்பிக்கைகோரும் தீர்மானத்தின் மீது பகல் 1.30 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் குமாராமிக்கு ஆளுநர் வி.ஆர்.வாலா கடிதம் அனுப்பியதை அஸ்த்திரமாக பயன்படுத்தி கொண்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள், நாள் முழுவதும் அவை நடவடிக்கையில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? என்ற விவாதத்தை கையில் எடுத்தனர். அதன் காரணமாக நாள் முழுவதும் அவையில் நம்பிக்கைகோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கவில்லை. இரவு 8 மணிக்கு எதிர்கட்சி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆளும் கட்சி மறுத்தனர். இருதரப்பு வாதம், விவாதம் கேட்ட பின், 22ம் தேதி தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்துவதாக உறுதியளித்து அவையை ஒத்தி வைத்தார்.அதன்படி நேற்று காலை அவை கூடுவதற்கு முன்பே முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-மஜத எம்எல்ஏகள் சபாநாயகரை சந்தித்து நம்பிக்கைகோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடத்த மேலும் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும், வாக்கெடுப்பு புதன்கிழமை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் முதல்வரின் கோரிக்கையை ஏற்காத சபாநாயகர் திட்டமிட்டப்படி மாலைக்கும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று உறுதியாக தெரிவித்தார். பகல் 12.10 மணிக்கு அவை கூடியதும் வாக்கெடுப்பு நாட்களை விஸ்தரிக்க வேண்டும் என்று ஆளும் கட்சி தரப்பில் வற்புறுத்தினர். இதற்கு பாஜவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நள்ளிரவு 11.40 வரை இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.சட்டபேரவையில் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட கடும் அமளிக்கு இடையில் அவையை இன்று ஒத்தி வைப்பதாக கூறிய சபாநாயகர் ரமேஷ்குமார், காலை 10 மணி முதல் 4 மணி வரை நம்பிக்கைகோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த வேண்டும். 4 முதல் 5 மணி வரை விவாத்திற்கு பதிலளித்து முதல்வர் குமாரசாமி பேச வேண்டும். 5 மணி முதல் 6 மணிக்கும் வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என்று கடுமையான நிபந்தனையுடன் அவையை ஒத்தி வைத்தார். இதற்கிடையே, இன்று கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில், பாஜக ஆதரவு சுயச்சை எம்எல்ஏக்கள் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரஸ் முற்றும் மஜத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்களை அப்புறப்படும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பெங்களூவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் தடை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மதுபானக் கடைகளும், பார்களும் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, நம்பிக்கையில்லா தீர்மானம் மீது சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி பேசி வருகிறார். கர்நாடகாவின் 6 கோடி மக்களிடம் மன்னிக்கேட்டு கொள்கிறேன் என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு நன்றி என்று பேசி வருகிறார்.

மூலக்கதை