சட்டப்படி செயல்படும் காவல்துறையினரை மிரட்டுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: உயர்நீதிமன்ற கிளை
மதுரை: சட்டப்படி செயல்படும் காவல்துறையினரை மிரட்டுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறியுள்ளார். தங்களது கடமைகளை செய்யும் காவலர்களை மிரட்டும்போக்கு தமிழகத்தில் அதிகரித்துள்ளதாகவும், மன அழுத்தத்துடன் செயல்படும் காவலர்களை பாதுகாக்கும் கடமை நீதிமன்றம், உயரதிகாரிகள், மக்களுக்கு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.