தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை: கணவர் கைது
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணமாகி 12 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் இருவரிடையே ஏற்பட்ட தகராறில் கணவன் கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட சசிகலா உடலை மீட்ட போலீஸ், கணவன் உதயராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.