பிரதிஷ்டை தின பூஜை சபரிமலையில் நடை திறப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பிரதிஷ்டை தினம் ஜூன் 1ம் தேதி ஆகும். இதையொட்டி நேற்று மாலை 5 மணியளவில் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். நேற்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெற வில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும். இந்த தரிசனத்தில் பக்தர்களுகு்கு அனுமதி இல்லை.