போலீஸ் தாக்குதலில் 2 குழந்தைகள் பலி

தினமலர்  தினமலர்
போலீஸ் தாக்குதலில் 2 குழந்தைகள் பலி

நைரோபி: ஆப்ரிக்க நாடான கென்யாவின் கவாலே மாகாணத்தில், அல் - குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர், ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த வீட்டுக்குச் சென்ற போது, உள்ளே இருந்த நபர், கையெறி குண்டுகளை வீசினார்.இதையடுத்து, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், அந்த நபரின் இரண்டு குழந்தைகள், கர்ப்பிணி மனைவி படுகாயம் அடைந்தனர். சிறிது நேரத்தில் இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக பலியாகினர்.அந்த நபரின் மனைவி உயிர் பிழைத்தாலும், அவரது வயிற்றில் இருந்த கரு கலைந்தது. 'போலீசாரின் இந்த நடவடிக்கை, மனித உரிமை மீறல்' என, மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த சண்டையில், பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் அந்த நபரும் படுகாயம் அடைந்தார்.

மூலக்கதை