கொரோனாவிற்கு மகள் பலி; தந்தை உயிரும் பிரிந்தது

தினமலர்  தினமலர்
கொரோனாவிற்கு மகள் பலி; தந்தை உயிரும் பிரிந்தது

விருகம்பாக்கம் : கொரோனாவிற்கு மகள் இறந்த சோகத்தில், தந்தையின் உயிர் பிரிந்தது.

விருகம்பாக்கம், இளங்கோ நகரைச் சேர்ந்தவர், தியாகராஜன், 85. இவரது, 55 வயது மகளின் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், 55 வயது பெண்ணிற்கும், நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனைக்கு செல்லவிருந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

மகள் இறந்த அதிர்ச்சியில், தியாகராஜனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் பலியானார்.இதையடுத்து, அவரது ரத்த மாதிரிகள் எடுத்து, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பின், அவருக்கும் தொற்று இருந்ததா என்பது தெரியவரும். மகள் இறந்த சோகத்தில், தந்தை இறந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை