சவுதி, ஜெருசலேமில் மசூதிகள் திறப்பு

தினமலர்  தினமலர்
சவுதி, ஜெருசலேமில் மசூதிகள் திறப்பு

சவுதி அரேபியா மற்றும் ஜெருசலேம் நாடுகளில் தொடர்ந்து இரண்டு மாத காலமாக மூடப்பட்டிருந்த மசூதிகள் இன்று வழிபாட்டிற்காக திறக்கப்பட்டன.


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணாக உலகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் , மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டன. கடந்த மார்ச் மாதம் பிற்பகுதியில் இருந்து சவுதி, ஜெருசலேம் நாடுகளில் மசூதிகள் மூடபட்டன.

இரண்டு மாத காலத்திற்கு பின்னர் சவுதியில் உள்ள 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மசூதிகள் திறக்கப்பட்டன. அதே நேரத்தல் புனிததலமான மெக்காவில் தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் சவுதி அரசின் இஸ்லாமிய விவகாரத்துறை அனைத்து மொழிகளிலும் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தகவல்கள் அனுப்பி உள்ளன. அதில் வழிபாட்டு தலங்ககளில் குறைந்தது 2 மீட்டர் இடைவெளிவிட வேண்டும். முகமூடி அணிந்திருக்க வேண்டும். என்பன உள்ளிட்ட விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது.


மேலும் மெக்காவை தொடர்ந்து ஜூலை மாதம் இறுதி வரையில் மூட வாய்ப்புஇருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக சவுதியின் மூத்த அதிகாரி ஒருவர் ஹஜ் பயணத்திற்கு திட்டமிட வேண்டாம் என புனித பயணாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் மதீனாவில் உள்ள மசூதி பொதுமக்களுக்காக ஒரளவு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை