சவுதியில் மேலும் 1,618 பேருக்கு கொரோனா
ரியாத் : கொரோனா பாதிப்பு அதிகரித்து சவுதியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,618 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 22 பேர் பலியாகினர். இவ்வாறு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சவுதியிலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கூடிக்கொண்டே செல்கிறது. சவுதி அரேபியாவில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) 1,618 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83,384 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் புதிதாக 22 பேர் பலியாகினர். இதையொட்டி, மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 480 ஆக உள்ளது.
நேற்று தொற்றில் இருந்து 1,870 பேர் குணமடைந்தனர். இதனால் நாட்டில் இதுவரை 58,883 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 24,501 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.