கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை திறக்க வாய்ப்பில்லை: சி.எம்.டி.ஏ. தகவல்
சென்னை: கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை திறக்க வாய்ப்பில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.எம்.டி.ஏ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டை திறக்க உத்தரவிடக் கோரி சந்திரசேகரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.