மறைந்த வீரர்களுக்கு டிரம்ப் அஞ்சலி; கிளம்பியது புதிய சர்ச்சை

தினமலர்  தினமலர்
மறைந்த வீரர்களுக்கு டிரம்ப் அஞ்சலி; கிளம்பியது புதிய சர்ச்சை

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வியாட்நாம் மற்றும் கொரிய போரில் மரணம் அடைந்த அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அதிபர் டிரம்ப் ஆர்லிங்டன் நேஷனல் சிமிட்ரியிலும், பால்டிமோர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு உரையாற்றினார். போரில் மரணம் அடைந்த வீரர்களுடன் கொரோனாவால் மரணம் அடைந்த வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார். இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் ஒன்று திரண்டனர். இவர்களில் பலர் மாஸ்க் அணியவில்லை. இது விவாதத்துக்குள்ளாகி உள்ளது. டிரம்ப் அரசு கொரோனா காலத்தில் மெத்தனமாக செயல்படுவதாக ஜனநாயகக் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.



இரங்கல் கூட்டத்தில் பேசிய டிரம்ப், வியட்நாம், கொரிய போர்களில் மரணம் அடைந்த அமெரிக்க வீரர்களது குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறி உள்ளார். இந்த நேரத்தில் அமெரிக்கா வெற்றிகரமாக கொரோனாவில் இருந்து மீண்டு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை