பரிசோதனையை அதிகப்படுத்துங்கள்: யோகிக்கு பிரியங்கா அறிவுரை

தினகரன்  தினகரன்
பரிசோதனையை அதிகப்படுத்துங்கள்: யோகிக்கு பிரியங்கா அறிவுரை

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், ‘மக்கள் மத்தியில் கொரோனா தொற்று அச்சத்தை போக்கி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதனால், அரசியல் ரீதியான போக்கை கைவிட்டு, மக்கள் தாங்களாகவே பரிசோதனைக்கு வருவதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். பரிசோதனைகளையும் அதிகரிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் இதை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், ஐசியு.க்களில் நெருக்கடி ஏற்படாது. தனிமை வார்டுகளை அதிகம் உருவாக்க வேண்டும். ஏழைகளுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்,’ என கூறியுள்ளார்.

மூலக்கதை