ஆந்திராவில் கனமழை : மின்னல் தாக்கி 7 பேர் சாவு

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் கனமழை : மின்னல் தாக்கி 7 பேர் சாவு

திருமலை: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 7 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நெல்லூர் மாவட்டம், சென்னூர் கிராமத்தில் ேநற்று இடியுடன் கனமழை பெய்தது. அப்போது, அப்பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 3 பேர் சம்பவ இடத்திேலேய உயிரிழந்தனர். அதேபோல் நாயுடுபேட்டை மண்டலத்தில் இடி தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். அவர்களது பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. மேலும், போகோலு மண்டலம், பாஸ்கராகிரிவாரி கான்ரியை சேர்ந்த பென்சிலரெட்டி(65), அல்லூரு மண்டலம்,  மேற்கு கோப்பள்ளியை சேர்ந்த சுப்பாராவ்(54) ஆகியோரும் மின்னல் தாக்கியதில் பலியானார்கள்.

மூலக்கதை