முதல்வர் நிவராண நிதிக்கு 50 லட்சம் வழங்கிய மோகன்லால்

தினமலர்  தினமலர்
முதல்வர் நிவராண நிதிக்கு 50 லட்சம் வழங்கிய மோகன்லால்

கொரோனா தாக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.. இதனால் சாதாரண தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தினசரி உணவுத் தேவைக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு கைகொடுத்து உதவும் விதமாக திரையுலக பிரபலங்கள் அந்தந்த மாநில முதல்வர்களின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்று நிதி உதவி மற்றும் பொருள் உதவியை வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் மோகன்லால், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு தனது பங்காக 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த சூழலில் நீங்கள் (முதல்வர் பினராயி விஜயன்) மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ரொம்பவே சிறப்பானவை.. இந்த சமயத்தில் என்னால் ஆன ஒரு சிறிய பங்களிப்பாக, மக்களுக்கு ஏதோ ஒருவகையில் உதவும் விதமாக இந்த 50 லட்சம் ரூபாயை ஏற்றுக்கொள்ள வேண்டும்.. தொடரட்டும் உங்கள் பணி.. உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

ந்தவகையில் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு முதல் சினிமா நபராக நிதி வழங்கியுள்ளார் மோகன்லால்.. இதற்கு முன்னதாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த சமயத்தில் கேரள திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் விதமாகவும் பத்து லட்ச ரூபாய் வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை