அல்லு அர்ஜுன் படத்தில் காட்டிலாகா அதிகாரியாக விஜய்சேதுபதி

தினமலர்  தினமலர்
அல்லு அர்ஜுன் படத்தில் காட்டிலாகா அதிகாரியாக விஜய்சேதுபதி

தமிழிலேயே பிசியாக நடித்து வந்தாலும் தற்போது மலையாளம், தெலுங்கு என மற்ற மொழிகளிலும் விஜய்சேதுபதிக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமாகி உள்ளார் விஜய்சேதுபதி.. இதை பயன்படுத்திக் கொள்ள நினைத்த இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜுன் நடிப்பில் தான் இயக்கும் புஷ்பா படத்தில் விஜய்சேதுபதிக்கு ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஒதுக்கியுள்ளாராம்.

சில வருடங்களுக்கு முன்பு ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழர்கள் இருபது பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது அல்லவா..? அதன் பின்னணியில் தான் இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். செம்மரம் கடத்தும் லாரி டிரைவர் ஆக அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். அவரை வேட்டையாடி பிடிக்க முயற்சிக்கும் காட்டிலாகா அதிகாரியாக விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

மூலக்கதை