பாகிஸ்தானில் 58 பேர் சாவு

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானில் 58 பேர் சாவு

பாகிஸ்தான் தேசிய சுகாதார சேவை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பாகிஸ்தானில் புதிதாக 208 பேருக்கு ெகாரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில 4 பேர் பலியாகியுள்ளனர். இதனால், பாகிஸ்தானில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. 467 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். 25 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,072 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப் மாகாணத்தில் 2030 பேரும், சிந்துவில் 986 பேரும், கைபர்பக்துன்கவாவில் 527 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 28 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை