பிரபாஸ் வழியில் அடுத்து அல்லு அர்ஜுன்

தினமலர்  தினமலர்
பிரபாஸ் வழியில் அடுத்து அல்லு அர்ஜுன்

தெலுங்கில் தயாரான 'பாகுபலி, பாகுபலி 2' ஆகிய படங்களை தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிட்டார்கள். அனைத்து மொழிகளிலுமே அந்தப் படங்கள் பெரிய வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்தன.

அதன்பிறகு தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த 'சைரா' படத்தையும் கூடுதலாக கன்னடத்தில் டப்பிங் செய்து ஐந்து மொழிகளில் வெளியிட்டார்கள். இனி, தெலுங்கில் உருவாகும் பெரிய படங்களை இப்படி ஐந்து மொழிகளில் வெளியிட்டால் இந்திய அளவிலும், உலக அளவிலும் வசூலை அள்ளலாம் என நினைத்துள்ளார்கள்.

அந்த வகையில் அல்லு அர்ஜுன் அடுத்து நடிக்க உள்ள 'புஷ்பா' படத்தை ஐந்து மொழிகளில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள். நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று(ஏப்., 8) படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. இப்படம் செம்மரக் கடத்தல் பின்னணி கொண்ட கதையாக இருக்கும் எனத் தெரிகிறது.

பின்னணியில் போலீசார் நிற்க, செம்மரங்கள் இருக்க, கொஞ்சம் தெனாவெட்டாக அல்லு அர்ஜுன் உட்கார்ந்திருக்கும் இப்படம் நிச்சயம் சர்ச்சைகளை உருவாக்கும் எனத் தெரிகிறது. தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனரான சுகுமார் இப்படத்தை இயக்குகிறார். இது இவர்களது கூட்டணியில் உருவாகும் 3வது படமாகும். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

மூலக்கதை