அஜித்திற்கு அடுத்து யார் அள்ளித் தரப் போவது ?

தினமலர்  தினமலர்
அஜித்திற்கு அடுத்து யார் அள்ளித் தரப் போவது ?

கொரானோ நிதியாக அஜித் தரவில்லை, விஜய் தரவில்லை என்று தான் கடந்த சில நாட்களாகவே பல்வேறு சமூக வலைத்தளங்களில் ஒரு சர்ச்சை நிலவியது. ஆனால், அவையனைத்திற்கும் சைலன்டாக ஒரு பதில் கொடுத்துவிட்டார் அஜித்.

1 லட்சம் கொடுத்தால் கூட அதைப் பற்றி பத்திரிகைச் செய்தி வெளியிடும் நடிகர்களுக்கு மத்தியில் 1.25 கோடி கொடுத்தும் அதைப் பற்றி எந்த பத்திரிகைச் செய்தியும் வெளியிடக் கூடாது என கறாராக சொல்லிவிட்டாராம் அஜித். நன்கொடை பெற்றவர்கள் அதைப் பற்றி அறிவித்த பிறகுதான் செய்தியாக வெளிவந்தது.

பிரதமர், முதல்வர், பெப்ஸி என தனித் தனியாக நிவாரண நிதி வழங்கியுள்ளார் அஜித். இதற்கு முன் சிவகார்த்திகேயன் கொடுத்திருந்தாலும் அவர் பெப்ஸி, முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றிற்கு மட்டும் தான் கொடுத்தார். அஜித் கூடுதலாக பிரதமர் நிவாரண நிதியும் அளிவித்துவிட்டார்.

இப்போது அஜித்திற்குப் பிறகு அவரைப் போலவே யார் அள்ளித் தரப் போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நேற்றே '#PerfectCitezenThalaAJITH என்று டிரென்டிங்கில் கொண்டு வந்துவிட்டார்கள் அஜித் ரசிகர்கள்.

மற்றவர்களின் ரசிகர்களும் தங்கள் நடிகர்களைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் இப்படி நன்கொடை கொடுத்து பேச வைப்பார்களா ?.

மூலக்கதை