கொரோனா பரவியது எப்படி? சீனா விளக்க அறிக்கை

தினகரன்  தினகரன்
கொரோனா பரவியது எப்படி? சீனா விளக்க அறிக்கை

கொரோனா விவகாரத்தில் சீனா தகவல்களை மூடி மறைப்பதாகவும், அதன் மூலம் இன்று உலக நாடுகள் அனைத்தையும் இன்னலில் மாட்டி விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் அதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வரை அனைத்தையும் விளக்க அறிக்கையாக சீனா வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கடந்த ஆண்டு டிசம்பா் கடைசியில் சீனாவின் வுகான் நகர நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கொரோனா வைரசை முதல் முறையாக கண்டறிந்ததாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து மருத்துவமனைகளுக்கும் வுகான் நகராட்சி சுகாதார ஆணையம் அவசரமாக அறிக்கை அனுப்பியது. மேலும், அடுத்த நாளே, கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும், முககவசம் அணியும்படியும் வுகான் நகராட்சி ஆணைய இணையதளத்தில் வெளியிட்டது. இதன் பின் எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கையில் விளக்கப்பட்டாலும், வுகானில் உள்ள ஹூனான் கடல் உணவு சந்தையில் இருந்து அந்த நோய்த் தொற்று எவ்வாறு ஏற்பட்டத் தொடங்கியது என்பது தொடா்பாக எந்தவொரு தகவலும் இல்லை. அதேபோல், அந்த நோய்த் தொற்றை முதலில் கண்டறிந்து அதுதொடா–்பாக சமூக ஊடங்களில் எச்சரிக்கை செய்து, பின்னா் அந்த நோய்த் தொற்றுக்கு பலியான மருத்துவா் லி வென்லியாங் குறித்தும் எதையும் சீனா அரசு தெரிவிக்கவில்லை.சீனாவில் முதன்முறையாக யாரும் பலியாகவில்லைகொரோனாவின் ஆரம்ப புள்ளியான சீனாவில் 2 மாத கடுமையான கட்டுப்பாடுகளால் நோய் தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், ஹூபெய் மாகாணத்தில் தினசரி ஒருசிலர் இறப்பது வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில், முதல் முறையாக அங்கு நேற்று ஒருவர் கூட கொரோனாவுக்கு பலியாகவில்லை என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.  உள்நாட்டை சேர்ந்த யாருக்கும் புதிதாக நோய் தொற்றும் ஏற்படவில்லை. கொரோனாவுக்கு சீனாவில் 3,335 பேர் பலியான நிலையில் 95 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதி கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை