ஏப்ரல் 14ம் தேதி வரை இலங்கையில் கட்டுப்பாடு

தினகரன்  தினகரன்
ஏப்ரல் 14ம் தேதி வரை இலங்கையில் கட்டுப்பாடு

கொழும்பு: அண்டை நாடான இலங்கையில் 176 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் பலியாகியுள்ளனர்.  இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த அங்கு கடந்த மாதம் 20ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது ஏப்.14ம் தேதி வரை தொடரவுள்ளது. வெளிநாட்டினரின் வருகைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை